சட்ட கல்லூரிகளில் சேர 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: சட்டக் கல்லூரிகளிலும் எல்எல்பி படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்றுள்ள அனைத்து சட்டக் கல்லூரிகள் மற்றும் சீர்மிகு சட்டப் பள்ளி ஆகியவற்றில் நடத்தப்படும், மூன்றாண்டு எல்எல்பி, மூன்றாண்டு எல்எல்பி (ஹானர்ஸ்) பட்டப்படிப்புகளில் இந்த கல்வி ஆண்டில் மாணவ, மாணவியரை சேர்ப்பதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் www.tndalu.ac.inல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் மூன்றாண்டு எல்எல்பி ஹானர்ஸ் படிப்புக்கு 156 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர்வதற்கு 2758 விண்ணப்பங்கள் வந்துள்ளன. மூன்றாண்டு எல்எல்பி இடங்கள் 2,134 உள்ளன. இவற்றில் சேர்வதற்கு 13,469 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே, பலதரப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பிலிருந்து வந்துள்ள கோரிக்கைகளில் விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மேற்கண்ட படிப்புகளுக்கு வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் தேதியை நீட்டிப்பு செய்துள்ளது.

Related posts

திருச்சி ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!

உத்தரபிரதேசம் ஹத்ராஸ் சம்பவம் வேதனை அளிக்கிறது: வீடியோ வெளியிட்ட போலே பாபா சாமியார்

அதிமுகவுக்கு எதிராக அண்ணாமலை சூழ்ச்சி: எடப்பாடி பழனிசாமியை நம்பிக்கை துரோகி என கூறியதற்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம்