ஸ்ரீநகர் : யோகா மூலம் நாம் பெறும் ஆற்றலை ஸ்ரீநகரில் உணர முடிகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், “நாட்டு மக்களுக்கும் உலகின் ஒவ்வொரு மூலையில் யோகா செய்பவர்களுக்கும் வாழ்த்து 2014ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் யோகா தினத்தை நான் முன்மொழிந்தேன்; சர்வதேச யோகா தினம் 10ஆண்டு வரலாற்றை நிறைவு செய்துள்ளது,”இவ்வாறு தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றுள்ளார்.