இது உடல், மனம் மற்றும் ஆன்மிக இயல்புடைய ஒரு பயிற்சி என்று புரிந்துகொள்ளலாம். யோகா பல வயதுடைய அனைத்து வயதினருக்கும் உதவுகிறது. இந்தியாவில் உருவான இது, மனதுக்கும் உடலுக்கும் இடையே நல்லிணக்கத்தை கொண்டுவர உதவும் சரியான தூண்டுகோலாகும்.
ஒரு மாணவர் பெரும்பாலும் பணிகள் மற்றும் தேர்வுகளால் நிறைய மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். ஓய்வின்றி படிப்பது, பாடத்திட்டத்தை முடித்தல் என பல மன அழுத்தம் மற்றும் பதற்றம் எப்போதும் இருக்கும். ஆனால் அதை எவ்வாறு சமாளிப்பது என்று வரும்போது யோகா நிச்சயம் கைகொடுக்கும்.
பல மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். அவர்கள் ஒரே பத்தியை மீண்டும் மீண்டும் படிக்கிறார்கள். அவர்கள் பாடங்களை மனப்பாடம் மட்டும் செய்வதால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இன்றைய மாணவர்களிடையே இது மிகவும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. இப்படிப்பட்ட மாணவர்களும் பாடத்தில் முழுக் கவனம் செலுத்த யோகா உதவுகிறது.
மாணவர்கள் ஒன்றாக பயிற்சி செய்ய பல யோகாசனங்கள் உள்ளன. பள்ளியில் ஒன்றாக யோகா செய்வது ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான நட்பை உருவாக்க மாணவர்களுக்கு உதவும். நீங்கள் எந்த வயதில் யோகாவைத் தொடங்கினாலும், அல்லது அதில் இருந்து நீங்கள் என்ன பாடத்தைப் பெற்றாலும், அது உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் உதவும். யோகா பல்வேறு நுட்பங்களை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. மன அழுத்தம் மேலாண்மை, சுய பாதுகாப்பு, தியானம், நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறை மற்றும் பலவற்றை சொல்லலாம்.
ஒரு வேலையைத் தொடங்குவது, அல்லது அதை முடிப்பது, அல்லது நம் மூளையை அதில் ஈடுபடுத்துவது போன்றவற்றில் பெரும்பாலான நேரங்களில் நமக்கு உந்துதல், கவனம் அல்லது ஆர்வம் இல்லாததால்தான் தள்ளிப்போடுதல் மனப்பான்மை உண்டாகிறது .தினமும் யோகா செய்வதன் மூலம், மாணவர்கள் ஒரு வழக்கத்தை உருவாக்கவும், எப்போதும் மேற்கொண்ட பணியில் திறன் கொண்டவர்களாகவும், கற்றலில் முழு ஈடுபாடு கொண்டவர்களாகவும் திகழ உதவும். இதன் மூலம், மாணவர்கள் கற்றல்திறனை அதிகரிக்கவும், பணிகளை சரியான நேரத்தில் முடிக்கவும், அதே நேரத்தில் மன அழுத்தத்தை குறைக்கவும் முடியும்.
-முத்து