இதனையடுத்து, அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர் கண்காட்சி மட்டும் நாளை (30ம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மலர் கண்காட்சி தொடங்கப்பட்டு ஒரு வாரம் ஆனதால், அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள வடிவமைப்புகளில் ஒருசில இடங்களில் மலர்கள் வாடிய நிலையில் காணப்பட்டன. இதனை மாற்றி புதுப்பிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, தோட்டக்கலைத் துறை மூலம் உருவங்களில் இருந்த வாடிய பூக்கள் மாற்றப்பட்டு, புதுப்பிக்கப்பட்டது. இதனால் அந்த உருவங்கள் தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. அவற்றின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். மேலும், ஏற்காடு அரசு தாவரவியல் பூங்காவில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மீன் வடிவமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.