ஏமனுக்கு இஸ்ரேல் பதிலடி

ஜெருசலேம்: ஏமனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் அமெரிக்காவில் நடந்த ஐநா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தலைநகர் டெல் அவிவ் திரும்பினார். அவரது விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்தில் டெல்அவிவ் நகரில் விமான தாக்குதல் சைரன்கள் ஒலித்ததால் பீதி ஏற்பட்டது.

ஏமனில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டதாகவும், அதனை இடைமறித்து அழித்து விட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியது. இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏமன் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. ஹெடைடா நகரில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் துறைமுகப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Related posts

மக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியது மன நிறைவு தருகிறது: முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவு

ஒசூரில் அமையவிருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மூலமாக ஐபோன் தயாரிக்கும் ஆலை மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு: டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தகவல்

எந்த விமர்சனங்களுக்கும் ஆளாகாமல் மாநிலத்தை வளப்படுத்த வேண்டும்: புதிய அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுரை