எடியூரப்பா மீது போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை

பெங்களூரு: எடியூரப்பா மீதான போக்சோ வழக்கில் சிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பெங்களூருவை சேர்ந்த மமதா சிங் என்ற பெண் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 14ம் தேதி எடியூரப்பா மீது தனது 17 வயது மைனர் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர்.

இவ்வழக்கு விசாரணையை மாநில போலீஸ் டிஜிபி அலோக் மோகன் சிஐடி வசம் ஒப்படைத்தார். கடந்த 17ம் தேதி எடியூரப்பா சிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை நடந்துவரும் நிலையில், சிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

Related posts

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!