பெங்களூரு: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்டுள்ள போக்சோ வழக்கில், எடியூரப்பாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 17ம் தேதி எடியூரப்பா காவல்துறையின் முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்ய கூடாது என நீதிபதி கூறியுள்ளார்.