சென்னை: அண்மையில் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் டெல்லி இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: சீதாராம் யெச்சூரியின் குடும்பத்தினருடன் அன்பான நினைவுகளை பகிர்ந்துகொண்டேன்.
சீதாராம் யெச்சூரி எப்போதும், திராவிட முன்னேற்ற கழகம் குறித்தும், எங்களது தனிச்சிறப்பான உறவு குறித்தும் எவ்வாறு உயர்வாக போற்றி பேசுவார் என்றும், ஸ்டாலின் என்ற எனது பெயரை சுட்டிக்காட்டி அவர்கள் நினைவுகூர்ந்தனர். தோழரே! உங்களது இன்மையை ஆழமாக உணர்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.