14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!

டெல்லி: டெல்லி சிபிஎம் அலுவலகத்தில் 14-ம் தேதி சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் சீதாராம் யெச்சூரி உடல், டெல்லி எய்ம்ஸுக்கு தானமாக வழங்கப்படுகிறது. இந்திய அரசியலில் துருவ நட்சத்திரமாக விளங்கியவர் சீதாராம் யெச்சூரி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புகழாரம் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியை ஒருங்கிணைப்பதில் சிறப்பாக பங்காற்றியவர் யெச்சூரி என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

பாஜ-அதிமுக கூட்டணி பற்றி கேட்காதீங்க…எச்.ராஜா அலறல்

கட்சியில் அதிகார பகிர்வு வழங்காவிட்டால் கூண்டோடு விலகுவோம் சீமானுக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் நிர்வாகிகள் போர்க்கொடி

ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் மூழ்கி பலி