இந்த 3 நாட்களில் பயணிகள் தாம்பரத்திற்கு பதில் செங்கல்பட்டில் ஏறிக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 15ம் தேதி, சென்னை – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், சென்னை – நாகர்கோவில் அதிவிரைவு வண்டி, சென்னை – ராமேஸ்வரம் விரைவு வண்டி, சென்னை – தூத்துக்குடி (முத்துநகர் விரைவு வண்டி), சென்னை – திருநெல்வேலி அதிவிரைவு வண்டி, சென்னை – செங்கோட்டை (பொதிகை அதிவிரைவு வண்டி) ஆகிய ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது.
அதே போல், ஆகஸ்ட் 16ம் தேதி, சென்னை – மதுரை (தேஜஸ் விரைவு வண்டி), சென்னை – ராமேஸ்வரம் விரைவு வண்டி, சென்னை – தூத்துக்குடி, சென்னை – செங்கோட்டை (சிலம்பு விரைவு வண்டி) சென்னை – மதுரை அதிவிரைவு வண்டி ஆகிய ரயில்களும், ஆகஸ்ட் 17ம் தேதி சென்னை – மதுரை (தேஜஸ் விரைவு வண்டி), சென்னை – ராமேஸ்வரம் விரைவு வண்டி, சென்னை – தூத்துக்குடி உள்ளிட்ட விரைவு வண்டிகள் தாம்பரத்தில் நிற்காது.
மறுமார்க்கமாக, ஆகஸ்ட் 14ம் தேதி, திருநெல்வேலி – சென்னை அதிவிரைவு வண்டி, ராமேஸ்வரம் – சென்னை விரைவு வண்டி, தூத்துக்குடி – சென்னை (முத்துநகர் விரைவு வண்டி) ஆகிய ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது. ஆகஸ்ட் 15ம் தேதி நாகர்கோவில் – தாம்பரம் அதிவிரைவு வண்டி, செங்கோட்டை – சென்னை (சிலம்பு விரைவு வண்டி),
மதுரை – சென்னை அதிவிரைவு வண்டி (22624), ராமேஸ்வரம் – சென்னை விரைவு வண்டி, தூத்துக்குடி – சென்னை (முத்துநகர் விரைவு வண்டி), மதுரை – சென்னை (தேஜஸ் விரைவு வண்டி) ஆகிய ரயில்களும், ஆகஸ்ட் 16ம் தேதி நாகர்கோவில் – சென்னை அதிவிரைவு வண்டி, ராமேஸ்வரம் – சென்னை விரைவு வண்டி, தூத்துக்குடி – சென்னை (முத்துநகர் விரைவு வண்டி), மதுரை – சென்னை (தேஜஸ் விரைவு வண்டி) உள்ளிட்ட ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது. இவ்வாறு தெற்கு ரயில்வே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.