யானை கவுனியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்துக்கு இந்திரா காந்தியின் பெயரை சூட்ட வேண்டும்: செல்வப்பெருந்தகை கோரிக்கை

சென்னை: யானை கவுனியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்துக்கு இந்திரா காந்தியின் பெயரை சூட்ட வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு, வடசென்னை யானை கவுனி பகுதியில் மறைந்த ஜி.கே. மூப்பனார் திறந்து வைத்த சிலை இருப்பதை அனைவரும் அறிவர். இந்திராகாந்தி இறந்த பிறகு திறக்கப்பட்ட முதல் சிலை இதுதான். தற்போது அந்த பகுதியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டிருக்கிறது. அந்த மேம்பாலத்திற்கு இந்திரா காந்தியின் பெயரை சூட்டவேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே சென்னை மாநகரில் இந்திரா காந்திக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட தாங்கள் இந்த மேம்பாலத்திற்கும் அவரது பெயரை சூட்ட வேண்டும் என வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?