எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியை பின்தொடரும் 10 கோடி பேர்: எலான் மஸ்க் வாழ்த்து

நியூயார்க்: எக்ஸ் சமூக வலைதளத்தில் 10கோடி பின்தொடருவோரை கொண்டுள்ள தலைவராக இருக்கும் பிரதமர் நரேந்திரமோடிக்கு டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடியை எக்ஸ் வலைதள பக்கத்தில் 10.1கோடி பேர் பின்தொடர்கின்றனர். இது குறித்து டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘அதிகம் பேர் பின்பற்றப்படும் தலைவராக பிரதமர் நரேந்திரமோடி இருப்பதற்கு வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 3.8 கோடி பின்தொடருவோர் உள்ளனர். இதேபோல் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனை 2.15 கோடி பேர் எக்ஸில் பின்தொடருகின்றனர்.

 

Related posts

ரூ.5 கோடி மதிப்பிலான சிலை அமெரிக்காவில் மீட்பு : காவல்துறை தகவல்

பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு: குழு அமைப்பு

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிவு!!