அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்க கோரி வழக்கு : எக்ஸ் தளத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

திருச்சி : நாம் தமிழர் கட்சியினரின் அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்கக் கோரி திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணையின் போது, சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை போலி முகவரி கொண்டு பதிவது அதிகரிப்பு என்றும் அவதூறு கருத்து பதிவை தடுக்க எக்ஸ் தளம் கணக்கு துவங்கும்போது ஆதாரை கட்டாயமாக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்தது. இதையடுத்து, ஒன்றிய அரசு, எக்ஸ் வலைத்தள பொறுப்பு அதிகாரி பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு ஒதுக்கிய நிதி யானை பசிக்கு சோளப்பொறி: செல்வப்பெருந்தகை விமர்சனம்

ஜாபர் சேட் மீதான அனைத்து வழக்கு விசாரணைக்கும் உச்சநீதிமன்றம் தடை

கவிஞர் மு.மேத்தா, பாடகி சுசீலாவுக்கு “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருதுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்