இதில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு வரும் 24ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை திருவள்ளூர் அடுத்த காக்களூர், சி.சி.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர், ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 பள்ளிகளில் நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரர்கள் இத்தேர்விற்கான அனுமதிச்சீட்டினை திருவள்ளூர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் இணையதள முகவரியான https://www.drbtvl.in-ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் 7338749108 மற்றும் 044 – 27662622 என்ற தொலைபேசி எண் அல்லது jrtlr.rcs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.