இப்பதவிகளுக்கான தேர்வுக்கு நேற்று முதல் வருகிற 30ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சியின் இணையதளம்(www.tnpsc.gov.in, www.tnpscexams.in) வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணைய வழி விண்ணப்பங்களை ஜூலை 5ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் ஜூலை 7ம் தேதி இரவு 11.59 மணி வரை திருத்தம் செய்யலாம். இப்பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு ஆகஸ்ட் 19ம் தேதி நடக்கிறது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல்நிலை தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். மெயின் தேர்வு அக்டோபர் மாதம் 4 நாட்கள் நடக்கிறது.
அதாவது, அக்டோபர் 28ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மொழிபெயர்ப்பு தேர்வு நடக்கிறது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை முதல் தாள்(சட்டம்) தேர்வு நடக்கிறது. 29ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 3ம் தாள் தேர்வும் நடக்கிறது. இத்தேர்வுக்கான வயது வரம்பு, கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உரிமையியல் நீதிபதி பதவிக்கான தேர்வு கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு இப்போது தான் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.