டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகமாட்டேன் என பிரிஜ்பூஷன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நான் பதவி விலகினால் என் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டுவிட்டதாக அர்த்தமாகிவிடும். வழக்குகள் பதிந்துள்ள டெல்லி காவல்துறையின் விசாரணைக்கு தயார் எனவும் பாஜக எம்.பி. பிரிஜ்பூஷன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.