எனவே, செவ்வாய்க்கிழமைகளில், அங்காரக வழிபாடு, அதாவது செவ்வாய் பகவான் வழிபாடு, அதாவது முருகப் பெருமான் வழிபாடு மிக மிக அவசியம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மறக்காமல் வழிபடுங்கள். முடியும்போது, வைத்தீஸ்வரன் கோவில் திருத்தலத்துக்குச் சென்று அங்காரக வழிபாடு செய்யுங்கள். கண்ணார தரிசித்து மனதாரத் தரிசித்து வாருங்கள்.இதனால், வாழ்வில் ஏற்றங்களையும் நல்ல நல்ல மாற்றங்களையும் பெறுவது உறுதி.
செவ்வாய்க்கிழமைகளில், செவ்வாய்க்கு உரிய முருகக் கடவுளை கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வேண்டுங்கள். வாழ்வில் தடைப்பட்ட காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவார் முருகக் கடவுள். செவ்வாய் பலம் பெற்று, செம்மையாய் வாழ்வீர்கள்.