உலக கோப்பை கிரிக்கெட்; பாகிஸ்தான்-இங்கிலாந்து போட்டி தேதியை மாற்ற கோரிக்கை

கொல்கத்தா:உலக கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் நவ. 17ம்தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் நவ. 12ம் தேதி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் மோத உள்ளன. இந்நிலையில் அன்று கொல்கத்தாவில் காளி பூஜை பிரமாண்டமாக கொண்டாடப்படும் என்பதால் பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் ஏற்படும். எனவே போட்டியை 11ம்தேதிக்கு மாற்றவேண்டும் என பெங்கால் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளது.

ஏற்கனவே இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக். 15ம்தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ள நிலையில் நவராத்திரி தொடக்க விழா என்பதால் ஒருநாள் முன்னதாக போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் திருத்தப்பட்ட போட்டி அட்டவணை வெளியாகும் என தெரிகிறது.

Related posts

8 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்: குடியரசுத்தலைவர் உத்தரவு

சிறையில் தூக்கமின்றி தவிக்கிறேன்: ஜாக்குலினுக்கு கடிதம் எழுதிய சிறை கைதி

இனக்கலவரத்திற்கு மூல காரணமான 900 மியான்மர் தீவிரவாதிகள் மணிப்பூருக்குள் ஊடுருவல்: உளவுத்துறை அறிக்கையால் பாதுகாப்பு படை உஷார்