இந்த நிலையில் ரசிகர்கள்தான் முக்கியம் என அறிக்கை விட்டு மீண்டும் 4 லட்சம் டிக்கெட்கள் விற்கப்படும் என பிசிசிஐ அறிக்கை வெளியிட்டது. இந்த முறை புக் மை ஷோவை விடுத்து நேரடியாக ஐசிசி இணையதளத்தில் டிக்கெட்கள் விற்கப்பட்டன. ஆனால், இப்போதும் ரசிகர்களுக்கு டிக்கெட்கள் கிடைக்கவில்லை. சில நிமிடங்களில் மொத்த டிக்கெட்களும் காலியாகின.
இந்நிலையில் பிசிசிஐயின் முடிவுகள் குறித்து முன்னாள் வீரர் வெங்கடேஷ் கூறுகையில், “எந்த சந்தேகமும், வாதமும் வேண்டாம். நாம் உலகக்கோப்பைக்கான முன்னோட்டத்தை சொதப்பி விட்டோம். முதலில் அட்டவணையை வெளியிட காரணமே இல்லாமல் தாமதம் செய்தது, அது போதாது என அட்டவணையை மாற்றி 5 போட்டிகளுக்கான தேதியை மாற்றியது. அதுவும் போதாது என வெளிப்படைத்தன்மை அற்ற, முறையற்ற டிக்கெட் விற்கும் முறையால் பிளாக் டிக்கெட் விற்பவர்களுக்கு மட்டுமே நன்மை நடந்துள்ளது” என காட்டமாக கூறி உள்ளார்.