சென்னை: சென்னை தியாகராய நகர், ஜீவா பூங்காவில், நடைபெற்ற உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் . சி.வி. கணேசன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து பங்கேற்றார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், முதன்மைச் செயலாளர்/ தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், மற்றும் மாணவ மாணவிகள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.