இதன் மூலம் செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்தியா ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது. இதே போன்று இந்திய வீரர்கள் முகேஷ், அர்ஜுன் திவ்யா மற்றும் வந்திகா ஆகியோர் தனி நபர் பிரிவில் தங்கத்தை கைப்பற்றினர். ஆண்கள் பிரிவில் குகேஷ், பிராக்யானந்தா, அர்ஜுன் மற்றும் பெண்கள் பிரிவில் வைஷாலி ஆகியோர் தமிழ்நாட்டின் பெருமையை உலக நாடுகளில் நிலைநாட்டி தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் புகழ் சேர்துள்ளனர். வரலாற்று சாதனைப் படைத்த தமிழக செஸ் விளையாட்டு வீரர்களை தமாகா சார்பில் பாராட்டுகிறேன்.