உலக இசை தினம் அமைச்சர் சாமிநாதன் வாழ்த்து

சென்னை: தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்ட அறிக்கை: மக்களின் இதயங்களை இணைக்கும் பாலமாக இசை விளங்கி வருகிறது. அச்சிறப்புரிய இசையை கொண்டாடும் வகையிலும், மக்களிடையே கொண்டு போய் சேர்க்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதியன்று உலக இசை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்பம், துன்பம், அச்சம் என மனிதர்களின் அடிப்படை உணர்ச்சிகளை வழங்குவது இசை.

அதனால் தான் இசைக்கு மயங்காதார் எவருமில்லை, இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்றெல்லாம் இசையின் மகிமையை சான்றோர்கள் புகழ்ந்து உரைத்துள்ளனர். மனிதர்களின் காதுகளில் அலையாக மட்டுமின்றி உடலோடும், உணர்வோடும் உறவாடும் அழகியல் மொழியான இசையை இன்று மட்டுமில்லாமல் தினந்தோறும் கொண்டாடி மகிழ்ந்திட எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்