இந்த நிலையில், போட்டி நாட்களில் அதிக தேவை இருக்கும் என்பதால் அக்டோபர் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை முக்கிய நகரங்களில் இருந்து அகமதாபாத் செல்லும் விமான கட்டணங்கள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து அகமதாபாத் வரையிலான இருவழி பயணத்திற்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்தாலும் நேரடி விமானங்களில் நபர் ஒருவருக்கு ரூ.45,425 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சாதாரண சூழ்நிலையில், சென்னை அகமதாபாத் – இடையே இருவழிப் பயணத்திற்கு ரூ.10,000 மட்டுமே செலவாகும். உலக கோப்பை நடக்கும் தேதிகளில் மும்பை, டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்லும் விமானக் கட்டணங்களும் 200% முதல் 325% அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. ஐசிசி போட்டிக்கு இன்னும் 3 மாதங்கள் இருப்பதால் மற்ற நகரங்களில் இருந்து அகமதாபாத்துக்கான விமான கட்டணம் மேலும் அதிகரிக்கும் என்று இந்திய பயன முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.