பந்தலூரில் கோடை வெயிலால் அவதி குடையுடன் பசுந்தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள்

பந்தலூர் : பந்தலூர் பகுதியில் தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை பறிக்கும் பெண் தொழிலாளர்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தங்ளை பாதுகாத்துக்கொள்வதற்கு தலையில் குடையுடன் பணியில் ஈடுபட்டுள்ளனர். பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் வழக்கத்தைவிட கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

கோடை வெயில் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக தேயிலைத்தோட்டங்களில் பசுந்தேயிலை பறிக்கும் பெண் தொழிலாளர்கள் தலையில் குடையை கட்டிக்கொண்டு பணிபுரிந்து வருகின்றனர். தொழிலாளர்கள் கூறுகையில், மலை பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தேயிலை மகசூல் குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு தேயிலை தோட்டம் நிர்வாகம் நிர்ணயிக்கும் கிலோ பசுந்தேயிலையை பறிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக தலையில் குடைகளை கட்டிக்கொண்டு பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

Related posts

தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் தொலைதூரக் கல்வியில் புதிதாக 4 பட்டயப்படிப்புகள் அறிமுகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு

கட்சி சின்னம் கைவிட்டு போனது என்று சும்மா… குழந்தை போல் அழாதீர்கள்: உத்தவை விமர்சித்த ஏக்நாத் ஷிண்டே!