Sunday, June 30, 2024
Home » தொழிலாளி, மூதாட்டி கொலை போலீசுக்கு பயந்து வாலிபர், முதியவர் தற்கொலை

தொழிலாளி, மூதாட்டி கொலை போலீசுக்கு பயந்து வாலிபர், முதியவர் தற்கொலை

by Karthik Yash

அன்னூர்: கோவையை சேர்ந்த பாலு என்பவர் அன்னூர் அருகே அல்லப்பாளையத்தில் திருமுருகன் நகரில் உள்ள சொந்த இடத்தில் வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் அவர் வீடு கட்டும் இடத்திற்கு வந்து பார்த்தபோது, வீட்டை ஒட்டி துர்நாற்றம் வீசியது. அன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ததில், அங்கு ஒரு சடலம் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஊட்டி லவ்டேல் பகுதியில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணையில், இறந்தவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த சதீஷ் வயது (22) என்பதும், இவர் திருப்பூரை சேர்ந்த தொழிலாளியான அசோக்குமாரை (49) என்பவரை அடித்து கொன்று அல்லப்பாளையத்தில் புதைத்ததும் என்பதும் தெரியவந்தது. கொலை தொடர்பாக மற்றொரு குற்றவாளியான நாகப்பட்டினத்தை சேர்ந்த முருகையன் (72) கைது செய்யப்பட்ட நிலையில், போலீசாரின் விசாரணைக்கு பயந்து சதீஷ் தற்கொலை செய்தது தெரியவந்தது.

மற்றொரு சம்பவம்: நெல்லை மாவட்டம் கூடங்குளம் சாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் எட்வர்ட் (80). இவரது மனைவி சவுந்திரவல்லி (70). இவர்களுக்கு இரு மகன்கள், 4 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை டிபன் தயார் செய்வதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டது. இதனால் தம்பதியிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த எட்வர்ட் நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதைத்தொடர்ந்து போலீசார் தன்னை கைது செய்வார்களே என்ற அச்சத்திற்கு ஆளான எட்வர்ட் தனது வீட்டருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

five + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi