மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி


ஆவடி: ஆவடி அடுத்த அயப்பாக்கம், திருவேற்காடு பிரதான சாலையில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு விளம்பர பலகை பொருத்துவதற்காக திருப்பரங்குன்றம் செய்யூர் பகுதியை சேர்ந்த காஜா மொய்தீன் (44) மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த ரவிக்குமார் (25) சென்றனர். இருவரும் கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு விளம்பர பலகை பொருத்தும் கம்பெனியில் பணியாற்றுகின்றனர். இருவரும் நேற்று மாலை, அயப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விளம்பர பலகை பொருத்த அளவு எடுத்தபோது, அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது இன்ச் டேப் விழுந்து அதை பிடித்திருந்த காஜா மொய்தீன், மின்சாரம் பாய்ந்து பலியானார்.

ரவிக்குமார் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து காஜா மொய்தீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், காஜா மொய்தீனுக்கு முனிரா என்ற மனைவியும், பரீனா (14) மற்றும் 9 மாத பெண் குழந்தையும் உள்ளது தெரிய வந்தது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது