கடையநல்லூர்: தென்காசி மாவட்டம் கடையநல்லூரை அடுத்த நயினாரகரம் துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் முத்தையா (50). சலவை தொழிலாளி. கடந்த 2 மாதத்திற்கு முன்பு வீட்டில் வளர்த்த நாய்க்கு வெறி பிடித்து முத்தையாவின் உடலில் பல்வேறு இடங்களில் கடித்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மயங்கி விழுந்தார். நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.