அப்போது ஆரோக்கிய யோகேஷ், அங்கிருந்த 2 செல்போன்கள் மற்றும் ₹3,500 ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கிறிஸ்டோபர், இதுகுறித்து கொடுங்கையூர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கிறிஸ்டோபரின் 2 செல்போன்களை எடுத்துச்சென்ற ஆரோக்கிய யோகேஷ், அவரது செல்போனை கிறிஸ்டோபர் வீட்டிலேயே விட்டுச் சென்றது தெரிய வந்தது. அந்த செல்போன் எண்ணை வைத்து நேற்று எம்ஜிஆர் நகர் கபிலர் தெருவைச் சேர்ந்த ஆரோக்கிய யோகேஷை (24) போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், கிறிஸ்டோபர் தனக்கு வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்று, தனது வீட்டில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதனால், அவர் குளிக்கச் சென்றபோது, அவரது 2 செல்போன் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ஆரோக்கிய யோகேஷ் மீது வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.