‘‘தேனிக்காரர் கூடாரத்தை காலி செய்ய மாஜி அமைச்சர் தீவிரம் காட்டி வருகிறாராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் தேனிக்காரர் அணியில் அதிருப்தியில் உள்ளவர்களை ‘ஸ்கெட்ச் போட்டு’ தூக்கும் முயற்சியில் சேலத்துக்காரர் அணியினர் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளார்களாம்…டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் தேனிக்காரர் ஆதரவாளர்களை தங்கள் அணி பக்கம் இழுக்கும் முயற்சியில் மாஜி அமைச்சர் அதிரடி வியூகம் வகுத்துள்ளாராம்… அதற்கான முயற்சியில் தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய டிப்ஸ்களை மாஜி அமைச்சர் ரகசியமா வழங்கியுள்ளாராம்.. டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தை பொறுத்த வரையில் தேனிக்காரர் அணியில் பெரிய அளவில் முக்கிய நிர்வாகிகள் கிடையாது. 2வது கட்ட நிர்வாகிகள் தான் உள்ளார்களாம்… இதனால் இதை தனக்கு சாதமா பயன்படுத்தி கொள்ள மாஜி அமைச்சர் திட்டமிட்டுள்ளாராம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘செஞ்சட்டை தோழர்களுக்குள் ஆள் பிடிக்கும் வேலை நடக்குதாமே…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘விடுதலை அடைந்த போது, ஒரே இயக்கமா சிவப்பு கொடி கட்சி இருந்த நிலையில், இந்திய- சீனப்போருக்கு பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் சிவப்பு கொடி இயக்கத்தை இரண்டாக ஆக்கியது. அப்போது முதல் 2 கட்சிகளும் தேர்தல் காலங்களில் மாறுபட்ட நிலைகளை எடுத்து வந்தன. இந்நிலையில 2 கட்சிகளும் ஒன்றிணைய வேணும்னு மார்க்சிய சிந்தனையாளர்கள் வலியுறுத்தி வர்றநிலையில, அரசியல் நிலைப்பாடுகளில் மட்டும் தற்போது இந்த கட்சிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஆனால் வெயிலூர், குயின்பேட்ைட, மிஸ்டர்பத்தூர் ஆகிய மாவட்டங்கள்ல மட்டும் 2 சிவப்புக்கொடி கட்சிகளுக்குள்ளயும், ஆடுபுலியாட்டம் நடந்து வருதாம். இதனால மாநில தலைமைகள், தர்மசங்கடத்துல இருக்காங்களாம்.
இதற்கு மாஜி பெண் எம்எல்ஏவும், அவரது கணவரும் தான் காரணமாம். ெசஞ்சட்டை தோழர்கள் சமீபத்தில் நட்சத்திரமில்லா சிவப்புக்கொடி இயக்கத்தில் ஐக்கியமான 2 பேருக்கும் உடனடியாக கட்சி பதவிகள் வழங்கப்பட்டதாம். சிவப்பு கொடி இயக்கத்துல, உடனடி பதவி என்பது குதிரைக்ெகாம்பாம். அப்படி இருக்கும்போது உடனடியா இவர்கள் 2 பேருக்கும் பதவிகள் கொடுக்கப்பட்டது, அந்த கட்சிக்குள் சலசலப்பை உண்டாக்கியதாம். இந்த சலசலப்பில் மாநில தலைமை, மாஜி பெண் எம்எல்ஏ பக்கமே சாய, வெறுத்துபோன முக்கிய நிர்வாகிகள், 2 கட்சிகளும் வேண்டாம்னு நினைத்து சமதர்ம கொள்கையை கையில் ஏந்திய சிறிய கட்சியில் இணைந்தார்களாம். இதற்காக மண்டபம் ஒன்றை ஏற்பாடு செய்து, நிகழ்ச்சி நடத்தினாங்களாம். அதேபோல் சில நிர்வாகிகள் நட்சத்திரத்தை கொடியில் ஏற்றிய சிவப்பு கட்சிக்குள் ஐக்கியமானார்களாம். இருப்பதை விரல் விட்டு எண்ணக்கூடிய ஆட்கள்தான். இவர்களுக்கு உள்ளேயே ஆள்பிடிப்பு வேலையும், பதவி சண்டையுமா? என்று மார்க்சிய சிந்தனையாளர்கள் புலம்பி வர்றாங்க’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி மகளிர் அணி.. லக… லக…! ‘‘கோவை மாநகரில் உள்ள ரவுடிகளின் கடந்த 5 ஆண்டு கால பின்னணி குறித்து ஆய்வுசெய்து வருகின்றனர். அதன்படி, கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை உள்ள 5 ஆண்டுகளில் ரவுடிகளின் பின்னணி குறித்து அந்தந்த காவல்நிலைய உளவுப்பிரிவு போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர். முன்பு, ரவுடியா வலம் வந்தவர்கள் தற்போது என்ன செய்கிறார்கள், அவர்கள் தொடர்ந்து ரவுடிகளா வலம் வருகிறார்களா, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்களா, அல்லது ஜாமீனில் வெளியே வந்து சுற்றுகிறார்களா, திருந்தி வாழ்கிறார்களா என பல்வேறு விவரங்களை சேகரிக்கின்றனர். இந்த ரவுடிகளில் சிலர், சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், அவர்களை சிறையில் சந்திக்க வரும் நபர்கள் யார், யார் அவர்களுடன் வேறு யார் யார் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது பற்றியும் தகவல் சேகரித்து வருகின்றனர். இந்த விசாரணை பட்டியலில், கோவை மாவட்ட இலைக்கட்சியை சேர்ந்த மகளிர் அணி நிர்வாகி ஒருவர் இணைந்துள்ளார். இவர், கோவை சிறையில் இருக்கும் ஒரு ரவுடியை, சமீபத்தில், முறைப்படி மனு எழுதிக்கொடுத்து, சந்தித்துவிட்டு வந்துள்ளார். இவர் ஏன் சந்தித்து பேசினார், அந்த ரவுடிக்கும், இவருக்கும் என்ன தொடர்பு உள்ளது என உளவுப்பிரிவு போலீசார் தங்களது விசாரணை வளையத்தை இறுக்கியுள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கலக்கத்தில் கிடக்குதாமே சின்னமம்மி குரூப்..’’ ‘‘சேலத்துக்காரரையும், தேனிக்காரரையும் ஒண்ணா சேர்த்து கட்சியை நடத்துவேன் என்று சின்னமம்மி லேட்டஸ்டாக ஸ்டேட்மென்ட் விடுத்திருப்பதை பார்த்து அவரது அடிப்பொடிகள் அரண்டு போயிருக்காங்களாம். இடியாப்ப சிக்கல்களுக்கு மத்தியில் இலைகட்சி சேலம் குரூப், தேனிகுரூப், குக்கர்குரூப், சின்னமம்மி குரூப் என்று நாலா பிரிஞ்சு நிக்குது. இதில் குக்கர்காரர், தேனியை ஏத்துக்குவேன். ஆனால் சேலத்துக்காரரை ஏத்துக்க மாட்டேன் என்கிறார். ஆனால் அவருக்கு பெரும்நம்பிக்கையா இருக்கும் சின்னமம்மியோ சேலத்துக்காரரையும், தேனிக்காரரையும் சேர்ப்பேன் என்கிறார். சின்னமம்மியின் இந்த ஸ்டேட்மென்ட் தான், மாங்கனி மாவட்டத்தில் உள்ள அவரது அடிப்பொடிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்காம். தனக்கு துரோகம் செஞ்ச சேலத்துக்காரருக்கு சின்னமம்மி சரியான பாடம் புகட்டுவாங்கன்னுதான், அவரை தீவிரமா ஆதரிச்சோம். எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் மாவட்டத்தில் அவரது பயண நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செஞ்ேசாம். அப்போது சேலத்துக்காரர் செய்த துரோகங்களையும் பட்டியலிட்டு நோட்டீஸ் ஒட்டினோம். இதையெல்லாம் ஆமோதித்த சின்னமம்மி, இப்போது இப்படி ஒரு ஸ்டேட்மென்ட் குடுத்திருப்பது ஆச்சரியமா இருக்கு. இதனால் தொடர்ந்து சின்னமம்மி டீமில் இருக்கலாமா? என்ற குழப்பமும் எங்ககிட்டு இருக்கு என்று கலங்குகின்றனர் இங்குள்ள அடிப்பொடிகள்’’ என்றார் விக்கியானந்தா.