மேலும் நிராகரிக்கப்பட்ட 11.85 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்தனர். இதையடுத்து, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை அரசு நியமித்தது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் கூடுதலாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களில் 2 லட்சம் பேருக்கு ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான ரூ.1000 உதவித்தொகை வரவு வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வரவு வைக்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில் இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பு தீபாவளி பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை ஒட்டி முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.