மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தை மேம்படுத்துதல் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரால் நடைமுறைப்படுத்தப்பட்ட மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தின் வாயிலாக, மகளிர் ரூ.297.71 கோடி பயணங்கள் மேற்கொண்டதை ஆராய்ந்து மேலும் இத்திட்டத்தை செம்மைப்படுத்தும் விதமாக புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்துதல் தொடர்பாக, இன்று தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தினார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், இன்று (16.06.2023), தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து, போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, போக்குவரத்துத் துறை சிறப்புச் செயலாளர் வெங்கடேஷ், அனைத்துப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், தனி அலுவலர் மற்றும் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இவ்வாலோசனைக் கூட்டத்தில், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர், பொதுமக்கள் பெரிதும் சார்ந்துள்ள பேருந்து போக்குவரத்தினை நிறைவாக அளித்திட புதிய பேருந்துகளை விரைவில் அறிமுகப்படுத்திட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, புதிய பேருந்துகளின் ஒப்பந்தப் புள்ளிகளை குறித்தும், பழைய பேருந்துகளை புதுப்பித்தல் நிலை குறித்தும் ஆய்வு செய்து, அதனை விரைவில் நடைமுறைப்படுத்திட வேண்டும் என தெரிவித்தார்கள்.

மேலும், தற்போது தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவ / மாணவியர்களுக்காக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்து. தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கிட வேண்டும் எனவும், பள்ளிகள் துவங்குவதற்கு முன் பேருந்துகள் பள்ளியை சென்றடையும் வகையில் இயக்கிட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழங்களில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்பிட பணிகளை துரிதப்படுத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். மேலும், போக்குவரத்துக் கழகங்களில், பணியின் போது இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பினை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் இறந்த பணியாளர்களின் பணப்பலன்களை அவர்கள் ஓய்வு பெரும்போதே வழங்கிட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார்கள். போக்குவரத்துக் கழகங்களில், பேருந்துகளின் இயக்க வருவாய் மற்றும் செலவுகள், இதர வருவாய் மூலம் நிதியை பெருக்குதல், செலவுகளை குறைத்தல் மற்றும் தற்போது செயல்பட் வரும் திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், விளையாட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தி அவர்களை ஈடுபடுத்திட வேண்டும் என தெரிவித்தார்கள். மேலும், போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைகளை அவ்வப்போது கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்திட வேண்டும் என அறிவுத்தினார்.

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு