Sunday, June 30, 2024
Home » கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தால் பெண்கள் உற்சாகம் தமிழகத்தில் வழக்கத்தை விட ரூ.3,415 கோடி பணம் புழக்கம்: ஏழை, எளிய மக்கள் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட்டம்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தால் பெண்கள் உற்சாகம் தமிழகத்தில் வழக்கத்தை விட ரூ.3,415 கோடி பணம் புழக்கம்: ஏழை, எளிய மக்கள் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட்டம்

by Ranjith

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் ஏழை, எளிய குடும்ப பெண்கள் முன்னேற்றம் அடையும் வகையில் மாதம் ரூ.1000 உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தது. பின்னர் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ‘கலைஞர் மகளிர் உரிமை திட்டம்’ தொடங்கி வைத்தார். அதன்படி தமிழ்நாட்டில் வருமையில் வாடும் 1 கோடியை 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் வங்கி கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 3 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு அரசு சார்பில் ‘கலைஞர் மகளிர் உரிமை திட்டம்’ பயணாளிகளான குடும்ப தலைவிகளுக்கு வங்கி கணக்கிற்கு ஆயிரத்து 138 கோடியே 43 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனால் குடும்ப தலைவிகள் தங்கள் குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு பால் உள்ளிட்டவை வாங்க மிகவும் பயன்படுத்தி வருகின்றனர். அதேநேரம் பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு முதல்வர் ஒவ்வொரு மாதம் வழங்கும் உதவி தொகையை சேமிப்பாக தங்களது வங்கி கணக்கில் வைத்துள்னர். சிலர் வங்கியில் இருந்து எடுத்து தனியாக வீட்டில் சேமித்து வைத்துள்ளனர்.

இத்தனை நாட்கள் ஆண்களின் உதவியை நாட்டி வந்த பெண்கள், உதவி தொகை மூலம் தங்கள் செலவுகளை யார் தயவும் இன்றி பார்த்து கொள்ளும் நிலை தற்போது உருவாகியுள்ளது.கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் தங்களது குழந்தைகளுக்கு தேவையான புதிய துணிகள், இனிப்புகள் வாங்கி கொடுக்க முடியாமல் தவித்து வந்தனர். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் ‘கலைஞர் மகளிர் உரிமை திட்டம்’ மூலம் வழங்கும் ரூ.1000 உதவி தொகையால் எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை பட்டி தொட்டிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் வெகு விமர்ச்சையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயணாயிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 வரவு வைக்கப்படும். தீபாவளி பண்டிகை ஞாயிற்று கிழமை என்பதால், நவம்பர் மாதத்திற்கான உரிமை தொகையை 10ம் தேதியே அனைத்து திட்ட குடும்ப பெண் பயணாளிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆயிரத்து 138 கோடியே 43 லட்சம் ரூபாய் வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் குடும்ப பெண்களின் வங்கி கணக்கில் கடந்து 3 மாதங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 3 ஆயிரத்து 415 கோடியே 29 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த 3 மாதங்களில் ஒரு குடும்ப பெண்ணின் வங்கி கணக்கில் தமிழ்நாடு அரசு ரூ.3000 வரவுவைத்துள்ளது. இந்த பணத்தை பெண்கள் இந்த தீபாவளி பண்டிகைக்காக சேர்த்து வைத்து, எப்போதும் இல்லாத வகையில் ‘மகிழ்ச்சி தரும் தீபாவளி’ யாக கொண்டா தயாராகி வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் இந்த தீபாவளியை, பெண்கள் ‘கலைஞர் மகளிர் உரிமை திட்ட தலை தீபாவளி’யாக கொண்டாடி வருகின்றனர். எனவே இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் வழக்கத்தை விட கூடுதலாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.3000 கோடி பணம், பழக்கத்தில் உள்ளது.

தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் அடுத்தவர்கள் உடைகள், பலகாரங்கள், உணவுகள் வாங்கித் தரமாட்டார்களா என ஏங்கி வந்த பல எழை எளிய குடும்பங்கள் இந்த ஆண்டு கலைஞர் மகளிர் உரிமை திட்ட உதவி தொகையால் தங்களது குழந்தைகளுக்கு பட்டாசுகள், புதிய துணிகள், இனிப்புகள் வாங்கி வருகின்றனர். குறிப்பாக, கிராமப்புறங்களில் கூட இந்த ஆண்டு வழக்கத்தைவிட தீபாவளி பண்டிகைக்காக பெண்கள் அதிகளவில் செலவுகள் செய்து வருகின்றனர். சிறிய பெட்டிக்கடைகள் முதல் பெரிய மளிகளை கடைகள் வரை வழக்கத்ைத விட இந்த ஆண்டு அதிகளவில் வியாபாரம் செய்துள்ளனர்.

இதனால் கிராம பொருளாதாரம் பெருமளவில் உயர்ந்துள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவில் பெரிய அளவில் பணப் புழக்கம் அதிகமாக இருந்தது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு கண்டிப்பாக தமிழக அரசின் நிதி மூலம் சுமார் 12 ஆயிரத்து 156 கோடி ரூபாய் தீபாவளி அல்லது பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மக்களிடம் புழக்கத்தில் இருக்கும். ஒன்றிய அரசின் நடவடிக்கைகளால் தற்போது வணிகம் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதனால் வங்கிகள்தான் பெரும் லாபம் அடைகின்றன. மக்களுக்கு இழப்புதான் ஏற்படுகிறது.

ஆனால் தமிழக அரசின் இந்த நடவடிக்கை மூலம் மக்கள் பணம், மக்களிடமே சுழற்சி முறையில் சுழன்று வருவதால், பெரிய அளவில் கிராம பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 குடும்ப பெண்கள் இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மகிழ்ச்சி கலந்து நன்றியை தெரிவித்துள்ளனர். உரிமை திட்டத்தால் தமிழகத்தில் கூடுதல் பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதால் சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

You may also like

Leave a Comment

three + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi