சென்னை: பெண்களை அதிகளவில் பூத் கமிட்டிகளில் சேர்க்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் பாஜக மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசினார். ஒன்றிய அரசின் திட்டங்களால் பயனடைந்த மக்களை அழைத்துப் பேச வேண்டும் என குறிப்பிட்டார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.