அதில் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மண்டலம் முழுமைக்கும் டோக்கன் மற்றும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 18ம் தேதி முன்பாகவே மண்டலத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடை பணியாளர்களுக்கும் 30 பேர் கொண்ட குழுக்கள் ஆன முதன்மை பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் முகாம் நடக்கும் இடம் குறித்து நியாயவிலை கடைகளில் தமிழில் தகவல் பலகை அமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 18ம் தேதி முதல் குடும்ப அட்டை எண், முகாம் நடக்கும் இடம் உள்ளிட்ட விவரங்கள் விண்ணப்படிவங்களில் எழுத வேண்டும் என்றும் 20ம் தேதி முதல் டோக்கன்கள் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.