இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று கொச்சைப்படுத்திய குஷ்புவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பா.ஜ.க.வைச் சேர்ந்த குஷ்புவை கண்டித்து அவரது உருவப்படத்தை பெண்கள் எரித்தனர். மேலும், மகளிர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்திய குஷ்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெண்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். குஷ்புவை கண்டித்து காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, செய்யாறு, சேலம், திருவண்ணாமலையில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குஷ்புவுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கண்டனம்
மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று கொச்சைப்படுத்திய நடிகை குஷ்புவுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். 4 ஆண்டுக்கு ஒருமுறை கட்சி மாறும் பெண்மணி குஷ்பு என்று கார்த்தி சிதம்பரம் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என கொச்சைப்படுத்தும் குஷ்புக்கு அடிப்படை பொருளாதாரம் தெரிந்திருக்க வேண்டும். வேருக்கு நீர் பாய்ச்சுவதுபோல் மகளிருக்கு நேரடியாக வழங்கும் மகளிர் உரிமை திட்டம் சிறந்த பொருளாதார உத்தி என்று அவர் கூறினார்.