திருவள்ளூர்: திருத்தணி புறவழிச்சாலையில் அதிமுகவினர் வைத்திருந்த பேனர் விழுந்து பைக்கில் சென்ற பெண் காயமடைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் பைக்கில் சென்ற கீர்த்தனா என்பவர் காயமடைந்தார். பேனர் விழுந்து காயமடைந்த கீர்த்தனா, திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.