நோயால் அவதி பெண் தற்கொலை

ஆவடி: சில வருடங்களாக முடக்கு வாத நோயால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடியை அடுத்த திருநின்றவூர், கோமதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (44). தனியார் மருத்துவமனையில் செக்யூரிட்டி. இவரது மனைவி கவுரி (38). இவர்களுக்கு திருமணமாகி 22 வருடங்களாகியும் குழந்தை இல்லை. கடந்த 15 நாட்களுக்கு முன், கவுரி அவருடைய அம்மாவுடன் காசி யாத்திரைக்குச் சென்றுவந்தார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் மதியம் வீட்டிற்கு வந்துவிட்டதாக கவுரி தொலைபேசியில் ஜெகதீஷ்க்கு தகவல் கொடுத்தார். இதில், கவுரிக்கு சில வருடங்களாக தீராத முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த அவதிப்பட்ட நிலையில் கவுரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு