தீக்குளித்த பெண் சாவு கணவன் காயம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர், கே.ராமசாமி நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் சிவராஜ், லாரி ஓட்டுனர். இவரது மனைவி கவுதமி (36). இவர்களுக்கு 2 மகள்கள். இந்நிலையில், சிவராஜ் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக கவுதமி சந்தேகமடைந்து அடிக்கடி கணவனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல் சிவராஜ் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்தபோது, கவுதமி கணவனிடம் இதுதொடர்பாக தகராறில் ஈடுபட்டு, வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிவராஜ், மனைவியின் உடலில் பற்றிய தீயை அணைத்து, ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தார். சிவராஜுக்கும் கையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கவுதமி பரிதாபமாக உயிரிழந்தார்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு