இதுபற்றி யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டி உள்ளார். இதனால் உயிருக்கு பயந்த அந்த இளம்பெண் புகார் அளிக்காத நிலையில் வினோத் ஜோஸ்வா அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து 5 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
நாளுக்குநாள் அவரின் தொந்தரவு அதிகரிக்கவே, மனமுடைந்த அந்த இளம்பெண் இதுகுறித்து கடம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகிலா வழக்குப்பதிவு செய்து பாதிரியார் வினோத் ஜோஸ்வாவை கைது செய்தார். அவர், 20 வயது இளம்பெண்ணை மட்டும்தான் பாலியல் துன்புறுத்தல் செய்தாரா அல்லது வேறு பெண்களிடமும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சர்ச்சுக்கு பாட்டு கற்றுக் கொள்ள வந்த இளம்பெண்ணை பாதிரியார் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.