மாலை 6 மணிக்கு மேல் தாயை பார்க்க மகள் வந்தார். அப்போது, வேலம்மாள் உடல் முழுவதும் பேனாவால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தார். கழுத்தில் பேனா குத்திய நிலையில் இருந்துள்ளது. தகவலறிந்து வந்த விருதுநகர் கிழக்கு போலீசார் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளி சைக்கோவாக இருக்கலாம் என்ற போலீசார் சந்தேகிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டு மர்மநபரை தேடி வருகின்றனர்.