Monday, July 1, 2024
Home » கணவரிடம் இருந்து பாதுகாக்க வலியுறுத்தி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற இளம்பெண்

கணவரிடம் இருந்து பாதுகாக்க வலியுறுத்தி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற இளம்பெண்

by Lakshmipathi

*தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

தென்காசி : கணவரிடம் இருந்து பாதுகாக்க வலியுறுத்தி தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்த இளம்பெண், திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சிவகிரி வெள்ளானை கோட்டை மூக்கையா தெருவை சேர்ந்த முத்துராஜ் மனைவி செல்வராணி என்பவர் தனக்கு திருமணம் முடிந்து 12 வயதில் மகன் இருப்பதாகவும், சில வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நிலையில், தனது கணவர் முத்துராஜ் மற்றும் அவரது உறவினர்கள் அச்சுறுத்தல் விடுவதாகவும் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை எனக் கூறி நேற்று தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க தனது மகனுடன் வந்தார்.

அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து திடீரென கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டார். இதனை பார்த்த அருகில் இருந்த போலீசார் அவரை தடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த கலெக்டர் கமல் கிஷோர் தனது உதவியாளரை அனுப்பி சம்பந்தப்பட்ட பெண்ணிடம் இருந்து அந்த இடத்திலேயே மனுவை பெற்று வருமாறு கூறி உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

two × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi