இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், படகில் இருந்த 3 பேரும் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள். அவர்களின் பெயர்கள் விஜய் வினோத் அந்தோணி(29), நிடிசோ டிட்டோ(31), சகாய அந்தோணி அனிஷ்(29). 2 ஆண்டு முன்பு வேலைக்காக ஏஜன்ட் மூலம் குவைத் சென்ற அவர்களுக்கு சரியான சாப்பாடு வழங்காததோடு, சம்பளம் தராமல் வேலை வாங்கியுள்ளனர்.
பாஸ்போர்ட் கைவசம் இல்லாமல் அவர்களிடம் சிக்கி இருந்ததால் அவர்களால் வெளியேற முடியவில்லை. இதையடுத்து படகு மூலம் அவர்கள் குவைத்தில் இருந்து தப்பித்து மும்பை வந்துள்ளனர். இவர்களின் பாஸ்போர்ட் மற்றும் உடமைகளை சோதனை செய்ததில் சந்தேகப்படும் வகையில் எதுவும் இல்லை. எனினும் சட்டவிரோதமாக அவர்கள் கேட் வே ஆப் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.