மிசிசிப்பி மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அப்பகுதி முழுவதும் அனல் காற்று மற்றும் புகை மண்டலமாக காட்சியளித்தது. மிசிசிப்பிமாகாணத்தில் உள்ள ஜெபர்சன்டேவிஸ் வனப்பகுதியில் 1,360 பரப்பளவு கொண்ட காட்டுப்பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வசித்த குடியிருப்பு வாசிகள் அனல் காற்று மற்றும் கடும் புகையினால் அவதிக்குள்ளாகினர். மேலும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த காட்டுத்தீயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.