சாலையோர மரத்தை முறித்து கீழே தள்ளிய காட்டு யானைகள்; ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர மரத்தை முறித்து காட்டு யானைகள் கீழே தள்ளியதால் பரபரப்பு நிலவியது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது. இதற்கிடையே இன்று அதிகாலை ஆசனூர் அருகே சாலையோர வனப்பகுதியில் ஒரு காட்டு யானை தனது குட்டியுடன் நடமாடிக் கொண்டிருந்தது.

அப்போது காட்டு யானை தனது குட்டியுடன் சேர்ந்து சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தை முட்டி கீழே தள்ளியதால் மரம் வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதேபோல் தலமலையில் இருந்து தாளவாடி சாலையில் ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழிமறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்