Sunday, June 30, 2024
Home » நெல்லியாம்பதி புலயன்பாறையில் ஒற்றை காட்டு யானை உலா: வாகன ஓட்டிகள் பீதி

நெல்லியாம்பதி புலயன்பாறையில் ஒற்றை காட்டு யானை உலா: வாகன ஓட்டிகள் பீதி

by Suresh

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் நெம்மாராவை அடுத்துள்ள நெல்லியாம்பதி புலயன்பாறை பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று இரவு நேரத்தில் உலா வருகையால் மக்கள் பீதியடைந்துள்ளனர். நெல்லியாம்பதி அருகே புலயன்பாறை அரசு ஆரஞ்சு பண்ணைப் பகுதியில் நேற்றும், நேற்றுமுன்தினம் இரவுமாக ஒற்றை காட்டுயானை ஊருக்குள் புகுந்து உலா வந்ததால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். புலயன்பாறை டீ எஸ்டேட்களில் முகாமிட்டுள்ள காட்டுயானையால் தோட்டத்தொழிலாளர்கள் வெளியே நடமாடமுடியாமல் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இரவு, பகலாக காட்டுயானைகள் இரை,தண்ணீர் தேடி காட்டுயானைகள் அடிகடி உலா வருவதால் மக்கள் வீட்டை வெளியேற முடியாமல் வீடுகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர். இதனால் இவர்களின் சகஜவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தோட்ட வேலைகளுக்கு செல்லமுடியாமலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும், சுற்றுலாப்பயணிகளும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து தோட்டப்பயிர்களை சூறையாடுவதால் அச்சமடைந்துள்ளனர். நெல்லியாம்பதி போத்துண்டி சாலைகளிலும், நெல்லியாம்பதி கைக்காட்டி, புலயன்பாறை, கேசவன்பாறை, வ்யூ பாயின்ட் ஆகிய இடங்களில் ஒற்றை காட்டுயானையின் நடமாட்டம் உள்ளது. இதனால் இவ்விடங்களில் வசிக்கின்ற மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இவற்றை காட்டிற்குள் விரட்டியோட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வலியுறுத்திவாறு உள்ளனர். கடந்த சில நாட்களாகவே இந்த ஒற்றை காட்டுயானை இரவு பகல் நேரங்களில் உலா வந்தவாறு உள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள், சிறுவர் சிறுமியர்கள் வெளியே நடமாட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்டங்களில் பயரிடப்பட்டுள்ள ஊடுப்பயிர்களை துவம்சம் செய்து நாசப்படுத்தி விடுகின்றன. இதற்கு மேலாக காட்டுப்பன்றிகள், குரங்குகள், காட்டுமாடுகள், மான்கள், கடமான்கள், சிறுத்தை ஆகியவற்றின் நடமாட்டமும் உள்ளது. இவைகளாலும், மலைக்கிராம விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

two + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi