ஆவடி அருகே பரபரப்பு காட்டு பூனை பிடிபட்டது

ஆவடி:ஆவடி அடுத்த அண்ணனூர், அபர்ணா நகரைச் சேர்ந்தவர் பாலா. இவர் இரு தினங்களுக்கு முன்பு இரவு இவரது வீட்டு சமையலறைக்குள் காட்டுப் பூனை ஒன்று புகுந்து கொண்டது. வீட்டில் உருட்டும் சத்தம் கேட்டதும் முதலில் அதை பார்த்தபோது, வீட்டு பூனை என நினைத்த அவரது குடும்பத்தினர், அதன் அருகே சென்று பார்த்தனர். இதில், ஆக்ரோஷத்துடன் சீறியது மட்டும் அல்லாமல் பாலாவை கடிக்க பாய்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர்.

அங்கிருந்து அலறியடித்து வெளியே ஓடிவந்து அக்கம் பக்கத்தினரிடம் இது குறித்து கூறியுள்ளார். உடனே, ஆவடி சமூக ஆர்வலரும் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு இயக்குனர் ரீகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது தலைமையில் வந்த 4 பேர் கொண்ட குழுவினர் காட்டுப்பூனையை, ஒரு மணிநேரம் போராடி லாவகமாக பிடித்தனர். பின்னர், வெங்கல் அடர் வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது. இதில், சமையல் அறைக்குள் நுழைந்த காட்டுப்பூனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்