அங்கிருந்து அலறியடித்து வெளியே ஓடிவந்து அக்கம் பக்கத்தினரிடம் இது குறித்து கூறியுள்ளார். உடனே, ஆவடி சமூக ஆர்வலரும் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு இயக்குனர் ரீகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது தலைமையில் வந்த 4 பேர் கொண்ட குழுவினர் காட்டுப்பூனையை, ஒரு மணிநேரம் போராடி லாவகமாக பிடித்தனர். பின்னர், வெங்கல் அடர் வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது. இதில், சமையல் அறைக்குள் நுழைந்த காட்டுப்பூனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.