புளியங்குடியில் கொய்யா பழத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றி வேட்டை: ரூ.40 ஆயிரம் அபராதம் விதிப்பு

புளியங்குடி: புளியங்குடி கோட்டமலை வனப்பகுதியில் காட்டுபன்றிகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வனவர்கள் மகேந்திரன், குமார், வனகாப்பாளர்கள் ராஜு, சன்னாசி, தாசன், ஆசீர்வாதம் மற்றும் குழுவினர் ரோந்து சென்றனர். அப்போது மர்ம நபர் காட்டுப்பன்றியை இழுத்துக் கொண்டு செல்வதை பார்த்தனர். இதையடுத்து அவரை மடக்கி பிடித்தனர்.

அவரிடம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில், புளியங்குடி சிந்தாமணி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த கருப்பையா மகன் சுப்பிரமணியன் (47) என்பதும் இறைச்சிக்காக காட்டுப் பன்றியை கொய்யா பழங்களுடன் நாட்டு வெடிகுண்டு வைத்து வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணியனுக்கு வனத்துறையினர் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி