இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஜி.சம்பத் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார். இதில் காட்டுப்பன்றி, மான், யானை போன்ற காட்டு விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் உயிர் சேதம் ஆகியவற்றிக்கு இழப்பிடு வழங்க வேண்டும், காட்டுப்பன்றி சுட அனுமதி வழங்க வேண்டும், விலங்குகளால் ஏற்படும் பயிர் பாதிப்புகளுக்கு காப்பீடு, மனித உயிரிழப்பிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பாபு, ஜெயச்சந்திரன், அப்சல் அகமது பாண்டறவேடு கருணாமூர்த்தி உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.