கணவன் கண்ணெதிரே பரிதாபம் வேனில் சிக்கிய மனைவி பலி: கணவன், குழந்தை படுகாயம்

புழல்: சோழவரம் அருகே, பைக் மீது வேன் மோதியதில் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் மற்றும் குழந்தை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சோழவரம், புதுநகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கன்னிகேஸ்வரி (42). இவர். கொடுங்கையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றினார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு முருகேசன், பைக்கில் தனது மனைவி மற்றும் உறவினர் குழந்தை மோனிகா (7) என்பவரை அழைத்துக்கொண்டு சோழவரம் வந்துள்ளார். சோழவரம், பஜார் நிறுத்தம் அருகே வந்தபோது, பின்னால், மின்னல்வேகத்தில் வந்த பால் ஏற்றி வந்த மினி வேன், பைக் மீது வேகமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட 3 பேரும் பைக்குடன் சாலையில் விழுந்தனர்.

மினிவேன் சக்கரத்தில் சிக்கிய கன்னியேஸ்வரி, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். முருகேசன், குழந்தை மோனிகா ஆகியோர் படுகாயத்துடன் ரத்தவெள்ளத்தில் மயங்கிக்கிடந்தனர். தகவலறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கன்னியேஸ்வரி சடலத்தை கைப்பற்றி, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைகு அனுப்பிவைத்தனர். படுகாயமடைந்த 2 பேரையும் அதே மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, போலீசார் மினிவேன் டிரைவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராகுல்குமார்சா (25) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related posts

திருவிடைமருதூர் அருகே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு..!!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு 2,068 கனஅடி நீர் திறப்பு ..!!

மதுரை, கோவை மெட்ரோ ரயில் வழித்தடங்களில் ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் ஆய்வு : ரூ.22,108 கோடி முதலீடு செய்ய திட்டம்