Saturday, September 28, 2024
Home » மனைவியை பாலியல் தொழிலில் தள்ளிய கணவன் அதிரடி கைது: ஆபாச வீடியோவில் இருந்த தொழிலாளியும் சிக்கினார்

மனைவியை பாலியல் தொழிலில் தள்ளிய கணவன் அதிரடி கைது: ஆபாச வீடியோவில் இருந்த தொழிலாளியும் சிக்கினார்

by Ranjith

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி பகுதியைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 4 மாததிற்கு முன்பு, சேலம் உடையாபட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (23) என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த 3ம் தேதி, ஆடிப்பெருக்கு விழாவுக்காக ஆத்தூரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்த இளம்பெண், 5ம்தேதி மாலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். விசாரணைஇல் அவர் கண்ணீருடன் போலீசில் பகீர் தகவலை தெரிவித்தார்.

அதில், சேலத்தில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில், வாட்ச்மேனாக பணியாற்றி வரும் தமிழ்ச்செல்வனுடன் எனக்கு 4 மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நாங்கள் தனிமையில் உல்லாசமாக இருந்தபோது, எனது நிர்வாண படங்களை கணவர் செல்போனில் எடுத்துள்ளார். இதையறிந்த நான் அவரது செல்போனை வாங்கி பார்த்த போது, அவருடன் நெருங்கி பழகும் பல பெண்களின் நிர்வாண படங்களையும் அதில் வைத்திருந்தார்.

எனது படத்தையும் அவரது நண்பர்கள் பலருக்கு அனுப்பி, வீட்டிற்கு அழைத்து வந்து, பகலிலேயே அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள சொல்லி, அடித்து கொடுமைப்படுத்தினார். அதனையும் படமாக எடுத்து வைத்துள்ளார்’ எனக்கூறியிருந்தார். இதையடுத்து மகளிர் போலீசார், அப்பெண்ணின் கணவன் தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் உல்லாசமாக இருந்த 3 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கணவன் தமிழ்ச்செல்வன், அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூர் கேட்டை சேர்ந்த நடராஜன் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைதான தமிழ்ச்செல்வனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ‘தனது மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து பார்த்து ரசித்திருக்கிறேன். பிறகு தெரிந்த நபர்களுக்கு அனுப்பி, அவர்களை வரவழைத்து, மனைவியுடன் உல்லாசமாக இருக்கச் செய்தேன். இதற்காக பணம் பெற்றுக்கொண்டேன்’ என வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைதான தமிழ்ச்செல்வன், நடராஜனை போலீசார் ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த மேலும் சிலரை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

ten + nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi